371.''களித்தவர் கெடுதல் திண்ணம்; சனகியைக்
      கபடன் வவ்வி, அன்று
ஒளித்த வாய் துருவி உற்ற
      வானரர், இராம நாமம்
விளித்திட, சிறை வந்து ஓங்கும்;
     வெவ்வுயிர்த்து அயரல்'' என்று,
அளித்தனன்; அதனால் ஆவி
      ஆற்றினேன் - ஆற்றல் மொய்ம்பீர்!

     அயரல் - தளராதே; அளித்தனன் - அருளினான்.           56-3