கலிவிருத்தம்

3740.என்று அயா உயிர்க்கின்றவன்,
     ஏடு அவிழ்
கொன்றை ஆவிப்புறத்து இவை
     கூறி, 'யான்
பொன்ற, யாதும்
     புகல்கிலை போலுமால்,
வன் தயாவிலி!'
     என்ன வருந்தினான்;

     என்று இவை கூறு - என்று இத்தகைய வார்த்தைகளைப் பேசி; அயா
உயிர்க்கின்றவன் -
பெருமூச்சு விடுகின்றவனாகிய இராமபிரான்; ஏடு அவிழ்
கொன்றை
- இதழ்கள் மலர்ந்த கொன்றை மரங்களை உடைய; ஆவிப்புறத்து
-
பொய்கையின் கரையில் இருந்து; யான் பொன்ற - (கொன்றையை நோக்கி)
''சீதையின் பிரிவால் நான் அழிந்துபடுதலைக் கண்டும்; யாதும் புகல்கிலை
போலுமால் -
ஒன்றும் ஆறுதலாகக் கூறாது இருக்கின்றாய் (ஆதலால்); வன்
தயாவிலி -
வன்மைக் குணமுடைய அருளற்ற கொடியை''; என்ன
வருந்தினான் -
என்று வருந்திப் பேசினான்.

     பிரிந்தவர்கள் கொன்றையை நோக்கி வருந்துதல் நூல்மரபு. 'கொன்றைக்
கொடியாய் கொணர்கின்றலையோ? என்றைக்கு உறவாக இருந்தனையோ?'
என்று பின்னரும் (4205) கொன்றவை நோக்கி இராமன் பேசுவதைக் காண்க. 32