சந்திரன் உதயம் 3746. | அந்தியாள் வந்து தான் அணுகவே, அவ் வயின் சந்த வார் கொங்கயாள் தனிமைதான் நாயகன் சிந்தியா, நொந்து தேய் பொழுது, தெறு சீத நீர் இந்து வான் உந்துவான், எரி கதிரினான் என. |
அந்தியாள் - அந்திப்பொழுதாகிய பெண்; வந்துதான் அணுகவே - வந்து சேரவே; அவ் வயின் - அப்போது; சந்தவார் கொங்கையாள் - அழகிய கச்சணிந்த தனங்களை உடைய சீதை; தனிமைதான்- பிரிந்து தனியே இருக்கும் நிலையினை; நாயகன் சிந்தியா - இராமன் நினைத்து; நொந்து தேய்பொழுது- மனம்வருந்தி வாடும் போது; தெறுசீத நீர் இந்து- வருததுகின்ற குளிர்ந்த தன்மையை உடைய சந்திரன்; எரி கதிரினான் என- வெய்ய கதிர்களை உடைய சூரியன் போல; வான் உந்துவான் - வானத்தில் எழுவானாயினான். அந்தியாள் - மாலைக்காலமாகிய பெண்; 'அந்தியென்னும் பசலை மெய்யாட்டி' என்பது மணிமேகலை. (5-140). பிரிந்தார்க்குக் குளிர்ந்த பொருள்களுக்கு வெப்பம் தருமாதலின் சந்திரனும் சூரியன்போல வெப்பமுண்டாகத் தோன்றினான் என்றார். 'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலைமலரும் இந்நோய்' (குறள் 1227) என்றபடி மாலையில் ஆசை மிகுதியால் இராமனுக்குத் தனிமைத்துன்பம் அதிகமாயிற்று. என - உவம உருபு. 38 |