379. | ஆயவன் அங்குப் போகிய பின்னர், அகமீதே நோய் உறு தன்மைத்து ஆகிய வீரர்தமை நோக்கி, தூய மனத்தன் ஆகிய வாலி தரு தொன்மைச் சேயும் அவர்க்கே செப்பினன், நாடும் செயல் ஓர்வான். |
சேய் - மகன் (இங்கே அங்கதன்) (இப் படலத்தின் முதற் பாடலாக ஓர் ஏட்டில் 'புள்ளரசு' எனத் தொடங்கும் பாடலும், பிறிதோர் ஏட்டில் 'ஆயவன்' எனத் தொடங்கும் பாடலும் காணப்பட்டது.) |