கலிவிருத்தம்

3817.அயர்வுஇல் கேள்வி சால்
     அறிஞர் - வேலை முன்,
பயில்வு இல் கல்வியார் பொலிவு
     இல் பான்மை போல்,
குயிலும் மா மணிக்
     குழுவு சோதியால்,
வெயிலும், வெள்ளி வெண்
     மதியும், மேம்படா.

     அயர்வுஇல் கேள்விசால் - தளர்வு இல்லாத கேள்வியால் நிரம்
பப்பெற்ற; அறிஞர் வேலைமுன் - அறிஞர்களின் கடல்போன்ற கூட்டத்திற்கு
முன்; பயில்வு இல் கல்வியார் - கல்விப் பயிற்சி இல்லாதவர்கள்; பொலிவு
இல் பான்மை போல் -
மேன்மையில்லாது; விளங்குதல் போல; குயிலும்
மாமணிக் குழுவும் சோதியால் -
அச்சோலையில் பாதிக்கப்பட்ட சிறந்த
மணிகளின் திரண்ட ஒளியால்; வெயிலும் - சூரிய ஒளியும்; வெள்ளி வெண்
மதியும்
- வெள்ளி போன்ற வெண்திங்களின் ஒளியும்; மேம்படா -
மேம்பட்டுத் தோன்றவில்லை.

     இதனால் அங்குள்ள இரத்தினங்களின் ஒளி சூரிய சந்திரர்களின்
ஒளியினுக்கு மிக்க விளங்குவது அறியப்படுகிறது.  அயர்வு - ஐயம்திரிபு.
கேள்வியானது கல்வி அறிவைப் பெருக்குதலால் 'கேள்விசால் அறிஞர்'
என்றார்.  வேலை - கடல்; கடல் போன்ற அவையை உணர்த்திற்று; உவமை
ஆகுபெயர். கற்றார் முன் கல்லார் போல என்பது உவமை.  ''வாசகம் வல்லார்
முன்னின்று யாவர் வாய் திறக்க வல்லார்'' (895) ''எழுத்தறியார் கல்விப்
பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்'' (நன்னெறி - 21)
என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன.                              32