சுக்கிரீவனோடு வாலி பகைமை கொண்ட காரணம்கூறுதல் 3835. | 'அன்னவன்எமக்கு அரசன் ஆகவே, இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள், முன்னவன் குலப் பகைஞன், - முட்டினான் - மின் எயிற்று வாள் அவுணன், வெம்மையான். |
அன்னவன் - அத்தகையோனாகிய வாலி; எமன் அரசன் ஆகவே- எங்களுக்கு அரசனாக இருக்க; இன்னவன் - இச்சுக்கிரீவன்; இளம்பதம் இயற்றும் நாள் - இளவரசுப் பதவியைத் தாங்கி ஆட்சி புரிந்த நாளில்; முன் அவன் குலப் பகைஞன் - முன்னமே வாலியின் குலப்பகைவனாய் உள்ளவனான; மின் எயிற்று வாள் அவுணன் - மின்னல் போன்று ஒளி வீசும் பற்களை உடைய வாள் போன்ற கொடிய மாயாவி என்னும் அசுரன்; வெம்மையான்- சினம் கொண்டவனாய் (வாலியை); முட்டினான் - எதிர்த்தான். மாயாவி: 'மயன் குமரன். துந்துபியின் சகோதரன். மந்தோதரி உடன் பிறந்தவன். இவனேவாலியை யுத்தத்திற்கு அழைத்தவனாயிருக்கலாம்' - அபிதானசிந்தாமணி. 50 |