3891. ''மூலமே, வீரமே
     மூடினாயோடு, போர்
ஏலுமே? தேவர்பால் ஏகு''
     எனா, ஏவினான் -
''சால நாள் போர் செய்வாய்
     ஆதியேல், சாரல்; போர்
வாலிபால் ஏகு'' எனா - வான்
     உளோர் வான் உளான்.

     மூலமே - (அது கேட்ட சிவபிரான்) பண்டு தொட்டே; வீரமே
மூடினாயோடு -
வீரச் செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் உன்னோடு; போர்
ஏலுமே -
போரிடுவது முடியுமா? (முடியாது); தேவர் பால் ஏகு - (ஆதலால்)
நீ தேவர்களிடம் போர் செய்யப் போவாயாக; எனா ஏவினான் - என்ற
சொல்லி அனுப்பினான்; வான் உளோர் வான் உளான் - (அவனும் சென்று
தேவர்களைப் போருக்கு அழைக்க) அந்தத் தேவலோகத்தில் உள்ள
தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்; சால நாள்- (துந்துபியிடம்)
'நீ நீண்டகாலம்; போர் செய்வாய் ஆதியேல்- போர் செய்ய
விரும்புவாயாயின்; சாரல் - இங்கு வராதே; போர் வாலி பால்
ஏகு -
போர் செய்வதில் வல்ல வாலியிடம் செல்வாய்; எனா - என்று. . . .

     எனா என்பது அடுத்த பாடலில் 'விட' என்பதோடு முடியும்.  ஏலுமே -
ஏகாரம் எதிர்மறை.  சிவபிரான் துந்துபியைத் தேவர்களிடம் அனுப்பப் தேவர்
தலைவனாம் இந்திரன் அவனை வாலியிடம் அனுப்பிவைத்தான்.          6