3892.'அன்னவன் விட, உவந்து  அவனும்
     வந்து, ''அரிகள்தம்
மன்னவன்! வருக! போர்
     செய்க!'' எனா, மலையினைச்
சின்ன பின்னம் படுத்திடுதலும்,
     சினவி, என்
முன்னவன், முன்னர் வந்து
     அனையவன் முனைதலும்,

     அன்னவன் விட - அத்தேவேந்திரன் அனுப்பிவிட; அவனும் உவந்து
வந்து -
அந்தத் துந்துபியும் மகிழ்ந்து கிட்கிந்தைக்கு வந்து; அரிகள் தம்
மன்னவன் -
குரங்குகளுககு அரசனே!வருக போர் செய்க - வந்து
என்னோடு போர் செய்வாயாக; எனா - என்று சொல்லிக் கொண்டு;
மலையினை -
அம்மலையை; சின்ன பின்னம் படுத்திடுதலும் - பலவாறு
நாசப்படுத்துகையில்; என் முன்னவன் சினவி - என் தமையனான வாலி
சினங் கொண்டு; முன்னர் வந்து - எதிரில் வந்து; அனையவன் முனைதலும்
-
அந்த அசுரனோடு போர் செய்த அளவில். . . .

     'முனைதலும்' என்பது அடுத்த பாடலில் வரும் 'உணர்ந்திலர்'
என்பதனோடு முடியும் அன்னவன் - அகரச்சுட்டு அடியாக வந்த சொல்.
தேவேந்திரன் சொற்படியே துந்துபி வாலியிடம் சென்று போருக்கு அழைக்க
இருவரும் போர் புரியலாயினர் என்பதாம்.                           7