சீதையின் அணிகலன்களைக் கண்ட இராமன் நிலை 3904. | 'வைத்தனம் இவ் வழி; - வள்ளல்! - நின் வயின் உய்த்தனம் தந்த போது உணர்தியால் எனா கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான்; - நெய்த்தலைப் பால் கலந்தனைய நேயத்தான். |
நெய்த்தலை - தேனில்; பால் கலந்தனைய - பால் கலந்தாற் போன்ற; நேயத்தான் - இனிய நட்பினை உடைய சுக்கிரீவன்; வள்ளல் - (இராமனை நோக்கி) 'வள்ளலே! இவ்வழி வைத்தனம் - அந்த அணிகல முடிப்பை இங்கே பாதுகாப்பாக வைத்துள்ளோம்; நின்வயின் - நின்னிடத்து; உய்த்தனம் தந்த போது - கொண்டு வந்து தரும் போது; உணர்தி - உண்மையை அறிவாய்'; எனா - என்று கூறி; கைத்தலத்து - கையில்; அன்னவை கொணர்ந்து - அந்த அணிகலன்கள்களைக் கொண்டு வந்து; காட்டினான்-- ; நெய் - தேன்; நெய்த்தலைப் பால் கலந்தனைய நேயம் என்றது வெவ்வேறு சுவையுடைய தேனும் பாலும் கலக்கையில் புதிய இனிய சுவை பயப்பது போல் வேறுவேறு இயல்பினரான இராம சுக்கிரீவர் நட்பால் புதிய உறவு ஏற்பட்டு இனிமை பயக்கும் என்றவாறு. நெய்த்தலை - தலை ஏழனுருபு; கலந்ததனைய என்பது கலந்தனைய எனவிகாரமாயிற்று. 4 |