3951.கைக் கொடு கைத்தலம் புடைப்ப, காவலின்
திக் கயங்களும் மதச் செருக்குச் சிந்தின;
உக்கன உரும்இனம்; உலைந்த உம்பரும்;
நெக்கன, நெரிந்தன, நின்ற குன்றமே.

     கைக் கொடு கைத்தலம் புடைப்பு - (வாலி சினத்தால்) ஒரு
கையினைக் கொண்டு மற்றொரு கையினைத் தட்ட; காவலின்
திக்கயங்களும்-
(அதனால் எழுந்த ஓசையால்) உலகினைத் தாங்கி நின்று
காவல் புரியும்எட்டுத்திசை யானைகளும்; மதச் செருக்குச் சிந்தின - மதக்
களிப்பாகியசெருக்கினை நீங்கின; உரும் இனம் உக்கன - இடியின்
கூட்டங்கள் (தம்வலிமை குறைந்து) உதிர்ந்தன; உம்பரும் உலைந்த -
தேவர் உலகங்களும்வருந்தின; நின்ற குன்றம் - (பெயர்தலின்றி) நிலை
பெற்றிருந்த மலைகளும்; நெக்கன நெரிந்தன - பிளவுபட்டு நொறுங்கின.

     வாலி தன் இரு கரங்களைத் தட்டி எழுப்பிய ஒலியால் வலிமை
வாய்ந்ததிக்கு யானைகளும், இடியின் கூட்டமும், மலைகளும் நிலைகலங்கின
என்பதால் வாலியின் வலிமை மிகுதி உணர்த்தப்படுகிறது.  நெக்குதல் -
நெகிழ்ந்து பிளவுபடல்.  ''நெட்டிருப்புப் பாறைக்கு நெக்கு விடாப் பாறை, பசு
மரத்து வேருக்கு நெக்கு விடும்'' என்பது நல்வழி.(33).                17