3989. | உரத்தினால் மடுத்த உந்துவர்; பாதம் இட்டு உதைப்பர்; கரத்தினால் விசைத்து எற்றுவர்; கடிப்பர்; நின்று இடிப்பர்; மரத்தினால் அடித்து உரப்புவர்; பொருப்புஇனம் வாங்கிச் சிரத்தின்மேல் எறிந்து ஒறுக்குவர்; தெழிப்பர்; தீ விழிப்பர். |
உரத்தினால் மடுத்து உந்துவர் - (அவ்விருவரும் ஒருவரையொருவர்) தத்தம் மார்பினால் தாக்கித் தள்ளுவார்கள்; பாதம் இட்டு உதைப்பர் - கால்களால் உதைப்பார்கள்; கரத்தினால் விசைத்த எற்றுவர் - கைகளால் வேகமாய்த் தாக்குவார்கள்; கடிப்பர் - வாயினால் கடிப்பார்கள்; நின்று இடிப்பர் - ஒருவர்க்கொருவர் எதிர்நின்று இடிப்பார்கள்; மரத்தினால்அடித்து உரப்புவர் - மரங்களைக்கொண்டு அடித்துக் கொண்டு அதட்டுவார்கள்; பொருப்பு இனம் வாங்கி - மலைக்கூட் டங்களைப் பெயர்த்து; சிரத்தின் மேல் எறிந்து - தலை மேல் வீசி; ஒறுக்குவர் - தண்டிப்பர்; தெழிப்பர் - ஆரவாரிப்பார்கள்; தீ விழிப்பர் - (சினத்தால்) நெருப்புப் போல விழித்து நோக்குவர். உந்துதல், உதைத்தல், எற்றுதல், கடித்தல், இடித்தல், மரம் கொண்டு அடித்தல், உரப்புதல், ஒறுக்குதல், தெழித்தல் என வாலியும் சுக்கிரீவனும் போரிடும் வகைகள் கூறப்பட்டன. 55 |