வாலி அங்கதனை இராமனிடம் கையடைப்படுத்தல் 4091. | என்றனன், இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி, தன் துணைத் தடக் கை ஆரத் தனயனைத் தழுவி, சாலக் குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்குஇனத்து அரசன், கொற்றப் பொன் திணி வயிரப் பைம் பூண் புரவலன்தன்னை நோக்கி. |
என்றனன் - என்று; இனைய ஆய உறுதிகள் - இத்தன்மையன வான நன்மை பயக்கும் செய்திகள்; யாவும் சொல்லி - எல்லாம் (அங் கதனுக்குச்) சொல்லி; குன்றினும் சால உயர்ந்த - மலைகளைவிட மிக உயர்ந்ததான; திண்தோள் - வலிய தோள்களை உடைய; குரக்கு இனத்து அரசன் - வானரக் கூட்டத்திற்கு அரசனாகிய வாலி; தன் துணைத் தடக்கை - தன்னுடைய இருபெரும் கரங்களால்; தனயனை ஆரத்தழுவி - தன் மைந்தனான அங்கதனை இறுக அணைத்துக் கொண்டு; கொற்றம் - வெற்றியை உடைய; பொன்திணி வயிர பைம் பூண் - பொன்னால் செய்யப்பட்டு வயிரம் முதலிய மணிகள் பதிக்கப் பெற்ற பசும்(பொன்) அணிகலன்களை அணிந்த; புரவலன் தன்னை நோக்கி - அரசனான இராமனைப் பார்த்து . . . . 157 |