4216.'காது கொற்றம் நினக்கு அலாது
      பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை
      அன்று; பேதமை ஆம்அரோ;
பொது பிற்படல் உண்டு; இது ஓர்
      பொருள் அன்று; நின்று புணர்த்தியேல்,
யாது உனக்கு இயலாதது? எந்தை!
      வருந்தல்' என்ன இயம்பினான்.

     எந்தை - எம் தந்தை போன்றவனே!காது கொற்றம் - பகை வரைக்
கொல்லுதலால் வரும் வெற்றி; நினக்கு அலாது - (அற வழியிற் செல்லும்)
உனக்குக் கிடைப்பதல்லால்; பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ -
(அவ்அறத்திற்கு மாறுபட்ட) அயலார்க்கு (அரக்கர்களுக்கு) எவ்வாறு கிட்டும்?
வேதனைக்கு இடம் ஆதல் -
வருந்துதற்கு இடம் தந்து மனமழிவது; வீரதை
அன்று -
வீரத்தன்மையாகாது.பேதமை ஆம் அரோ - (அஃது)
அறியாமையின் பாற்படும் அல்லவா?போது பிற் படல் உண்டு - (எடுத்த
காரியம்) காலங்காரணமாகப் பிற்படுதலும் இயல்பு; இது ஓர் பொருள் அன்று
-
உனக்கு இது ஒரு பொருட்டன்று.  நின்று புணர்த்தியேல் - இப்பொழுதே
முனைந்து நின்று முயற்சி செய்வாயாயின்; யாது உனக்கு இயலாதது -
உன்னால் செய்ய இயலாதது யாது இருக்கின்றது?வருந்தல் என்ன
இயம்பினான் -
(ஆதலால்) வருந்த வேண்டாம்' என்று சொன்னான்.

     தமையன் தந்தைக்கு நிகர் ஆதலின் 'எந்தை' என் விளித்தான்.  'அறம்
வெல்லும் பாவம் தோற்கும்' என்பது நியதி ஆதலின் இராமன் வெற்றிபெறல்
உறுதி என்பதைக் 'கொற்றம்' நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?'
என்றான்.  வீரதை - வீரம்; போது பிற்படல் - காலத்தாழ்வுநேரல்.      69