4274.'  ''ஊரும், ஆளும், அரசும், உம் சுற்றமும்,
நீரும் ஆளுதிரேஎனின், நேர்ந்த நாள்
வாரும்; வாரலிர் ஆம் எனின், வானரப்
பேரும் மாளும்'' எனும் பொருள் பேசுவாய்.

     ஊரும் ஆளும் - (உங்கள்) நகரமான கிட்கிந்தையையும், குடி மக்
களையும்; அரசும் உம் சுற்றமும் - அரசாட்சியையும் உங்களது
உறவினர்களையும்; நீரும் ஆளுதிரே எனின் - நீங்களே அள விரும்பினால்;
நேர்ந்த நாள் -
(சீதையைத்) தேடுவதற்காக வர ஒப்புக்கொண்ட இக்
கார்த்திகை மாதத்தில்; வாரும் - (உடனே புறப்பட்டு) வர வேண்டும்; வாரலிர்
எனின் -
(அவ்வாறு) வராமல் போவீரானால்; வானரம் பேரும் மாளும் -
வானரம் என்னும் பெயரும் (இவ்வுலகில்) இல்லாது ஒழியும்; எனும் பொருள்
பேசுவாய் -
 என்னும் உண்மையை (சுக்கிரீவன்) முதலானவரிடம் நீ
உணர்த்துவாய்.

     நீரும் - உம் இசை நிறை: அசை நிலையுமாம்.                     6