4275.' ''இன்னும் நாடுதும், இங்கு இவர்க்கு வலி
துன்னினாரை'' எனத் துணிந்தார்எனின்,
உன்னை வெல்ல, உலகு ஒரு மூன்றினும்,
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய்.

     இன்னும் இங்கு இவர்க்கும் - இனி வேறாக இப்போது இராம
லக்குவராகிய இவர்களைக் காட்டிலும்; வலி துன்னினாரை நாடுதும் -
வலிமையுள்ளவரை நாடித் துணையாகக் கொள்வோம்; எனத் துணிந் தார்
எனின் -
என்று (அச்சுக்கிரீவன் முதலோர்) முடிவெடுத்தார் களென்றால்;
உன்னைவெல்ல -
உன்னை வெல்வதற்கு; உலகு ஒரு மூன்றினும் - மூன்ற
உலகங்களிலும்; நின் அலால் பிறர் இன்மை - உன்னையல்லாமல் வேறு
யாரும் இல்லாமையை; நிகழ்த்துவாய் - அவர்களுக்கு (எடுத்துச்) சொல்வாய்.

     பிறரால் வெல்ல முடியாத பேராற்றலோடு வேண்டுங்காலத்துத் தன்னைத்
தானே அடக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவன் இலக்குவன் என்பது, 'நின்ன
லால் பிறரின்மை' எனவே உவமை நீக்கிய தோன்றல் இலக்குவன் என்பது.  7