4278.மாறு நின்ற மரனும், மலைகளும்,
நீறு சென்று நெடு நெறி நீங்கிட,
வேறு சென்றனன்; மெய்ம்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றவன் - ஆணையின் ஏகுவான்.

     மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன் - சத்தியத்தால் சிறக்கும்
வழியில் இயங்குபவனாகிய இராமபிரானின்; ஆணையின் ஏகு வான் -
கட்டளைப்படி செல்பவனாகிய இலக்குவன்; மாறுநின்ற மரனும் - குறுக்கே
நின்ற மரங்களும்; மலைகளும் - மலைகளும்; நீறு சென்று - (தான் செல்லும்
வேகத்தால்) தூளாகி; நெடுநெறி நீங்கிட - நெடிய வழியில் (நீண்ட தூரத்தில்)
சென்று பரவும்படியாக; வேறு சென்றனன் - புதுவழி அமைத்துக்கொண்டு
சென்றான்.

     பழக்கப்பட்ட வழியன்றாதலின் 'வேறு சென்றனன்' என்றார்.  காற்றில்
பறந்து பரவும் துகள் நெடுந்தொலைவு போகுமாதலின் 'நெடுநெறி' என்றார்.  10