அங்கதன் சுக்கிரீவனைத் துயிலெழுப்புதல் 4291. | கிடந்தனன் - கிடந்தானைக் கிடைத்து இரு தடங் கை கூப்பினன், தாரை முன்நாள் தநத மடங்கல் வீரன், நல் மாற்றம் விளம்புவான் தொடங்கினான், அவனைத் துயில் நீக்குவான். |
கிடந்தனன் - (சுக்கிரீவன்) தூங்கிக் கொண்டிருந்தான்; கிடந் தானை - (அவ்வாறு) படுத்திருந்தவனான அவனை; தாரை முன்நாள் தந்த - தாரை முன்னாளில் பெற்றெடுத்த; மடங்கல் வீரன் - ஆண் சிங்கம் போன்ற வீரமுடைய அங்கதன்; கிடைத்து - நெருங்கிச்சென்று; இரு தடக்கை கூப்பினன் - (தன்னுடைய) பெரிய கைகளைக் குவித்து அஞ்சலி செய்தவாறு; அவனைத்துயில் நீக்குவான் - அந்தச் சுக்கிரீவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பி; நல் மாற்றம் விளம்புவான் தொடங்கினான் - மனத்திற்கு உகந்த நல்ல வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான். கிடந்தனன்: வினைமுற்று: கிடந்தான்: வினையாலணையும் பெயர். 23 |