4292.'எந்தை! கேள்: அவ்
      இராமற்கு இளையவன்,
சிந்தையுள் நெடுஞ்
      சீற்றம் திரு முகம்
தந்து அளிப்ப, தடுப்ப
      அரும் வேகத்தன்
வந்தனன்; உன் மனக்
      கருத்து யாது?' என்றான்.

     எந்தை கேள் - என் தந்தையே! நான் சொல்வதைக் கேட்பாயாக! அவ்
இராமற்கு இளையவன் -
அந்த இராமனுக்குத் தம்பியான இலக்குவன்;
சிந்தையுள் நெடுஞ்சீற்றம் -
மனத்திற் படிந்துள்ள பெருங் கோபத்தை;
திருமுகம் தந்து அளிப்ப -
முகமானது எடுத்துக் காட்ட; தடுப்ப அரும்
வேகத்தன் -
(யாராலும்) தடுக்க முடியாத வேகத்தோடு; வந்தனன் - வந்து
சேர்ந்துள்ளான்; உன் மனக் கருத்து யாது - உனது உள்ளக் கருத்து என்ன;
என்றான் -
என்று (சுக்கிரீவனிடம் அங்கதன்) கேட்டான்.

     எந்தை -மரூஉ.                                           24