4293. இனைய மாற்றம் இசைத்தனன்
      என்பது ஓர்
நினைவு இலான், நெடுஞ்
      செல்வம் நெருக்கவும்,
நனை நறுந் துளி
      நஞ்சு மயக்கவும்,
தனை உணர்ந்திலன், மெல்
     அணைத் தங்கினான்.

     நெடுஞ் செல்வம் நெருக்கவும் - அரசாட்சி என்னும் பெரிய செல்வம்
மமதையைத் தந்தாலும்; நறு நனை துளி நஞ்சு மயக்கவும்- மணமுள்ள
கள்ளின் துளியாகிய நஞ்சு, மயக்கத்தை அளித்ததாலும்; தனை உணர்ந்திலன்
-
தன்னை உணராமையால் (அச்சுக்கிரீவன் மெய்ம மறந்து); இனைய மாற்றம்
இசைத்தனன் -
அங்கதன் சொன்ன வார்த்தைகள் இன்னவையென்று; என்பது
ஓர் நினைவு இலான் -
புரிந்து கொள்ள இயலாத மன நிலையில்; மெல்
அணித் தங்கினான் -
மென்மையான படுக்கையில் (முன் போலவே)
கிடந்தான்.

     தன்னையுண்டவரை அறிவில்லாதவராக ஆக்குவதால் கள்ளை 'நஞ்சு'
என்றார்.  'எஞ்ஞான்றும், நஞ்சுண்பார் கள்ளுண்பவர்' (குறள்: 926).  நெடுமை:
பெருமை. நனி நறுந்துளி நஞ்சு - உருவகம்.                        25