4297. | மீட்டும் ஒன்று விளம்புகின்றாள்: ' ''படை கூட்டும்'' என்று, உமைக் கொற்றவன், ''கூறிய நாள் திறம்பின், உம் நாள் திறம்பும்'' எனக் கேட்டிலீர்; இனிக் காண்டிர்; கிடைத்திரால். |
மீட்டும் ஒன்று - மேலும் (தாரை) ஒரு வார்த்தை; விளம்புகின்றாள் - சொல்லுகின்றாள்; படை கூட்டும் என்று - சேனைகளைச் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்று; உமைக் கொற்றவன் கூறிய - உங்களைப் பார்த்து வெற்றி வீரனான இராமன் குறிப்பிட்ட; நாள் திறம்பின் - தவணை நாள் தவறிவிட்டால்; உம் நாள் திறம்பும் - உங்களுடைய வாழ்நாள் அழிந்து போகும்; எனக் கேட்டிலீர் - என்று (நான் பலமுறை) சொல்லியும் (அதற்கு ஏற்றவாறு) நடக்காமல் போய் வீட்டீர்கள்; இனிக் காண்டிர் - இனிமேல் (அதன் விளைவை) அனுபவத்தால் தெரிந்து கொள்வீர்கள்; கிடைத்திர் - (இப்பொழுது குற்றத்திலே) அகப்பட்டுக் கொண்டீர்கள். நாள் - வாழ்நாள். இப்பாடலால் தாரை முன்பே பலமுறை எச்சரித்திருக்கிறாள் என்பதுபுலப்படுகிறது. 29 |