இலக்குவன்பால் அனுமன் வருதல்

4328. என்று அவள் உரைத்த மாற்றம்
     யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வியாளன்,
      அருள்வர, நாண் உட்கொண்டான்,
நின்றனன்; நிற்றலொடும், 'நீத்தனன்
      முனிவு' என்று உன்னி,
வன் துணை வயிரத் திண்
     தோள் மாருதி மருங்கின் வந்தான்.

     என்று அவள் உரைத்த - இவ்வாறு அத்தாரை சொன்ன; மாற்றம்
யாவையும் -
வார்த்தைகளையெல்லாம்; இனிது கேட்டு - கவனமாகக் கேட்டு;
நன்று உணர் -
தெளிவாக உணர்ந்த; கேள்வியாளன் - (வேதக்)
கேள்வியறிவுடைய இலக்குவன்; அருள்வர - கருணை மேலிட; நாண்
உள்கொண்டான் நின்றனன் -
வெட்கத்தை மனத்தில் கொண்டவனாய்
நின்றான்; நிற்றலோடும் 'முனிவு நீத்தனன்' - (அவ்வாறு) நின்ற அளவில்
'இவன் கோபத்தை நீக்கிவிட்டான்'; என்று உன்னா - என்று கருதி;
வன்துணை -
வலிய போர்த்துணையாகவுள்ள; வயிரத் திண் தோள் மாருதி
-
உறுதியும் பலமும் கொண்ட தோள்களையுடைய அனுமன்; மருங்கின் -
(இலக்குவன்) அருகிலே; வந்தான் - வந்து சேர்ந்தான்.

     மாற்றம் -சொல்                                           60