4334. | 'உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறாக, மத யானை அனைய மைந்த! மற்றும் உண்டாக வற்றோ - சிதையாத செருவில் அன்னான் முன் சென்று, செறுநர் மார்பில் உதையானேல், உதையுண்டு ஆவி உலவானேல், உலகில் மன்னோ?' |
மதயானை அனைய மைந்த - மதங்கொண்ட யானையைப் போன்ற வீரனே! உதவாமல் ஒருவன் செய்த - (தான் ஒருவனுக்கு) முன்பு எந்த உதவியும் செய்யாமலிருக்க(த் தனக்கு) அவன் செய்த; உதவிக்குக் கைம்மாறு ஆக - உதவிக்கு உதவியாக; சிதையாத செருவில் - கெடுதல் இல்லாத போரில்; அன்னான்முன் சென்று - (அவனுக்குத் துணையாக) முன்னே சென்று; செறுநர் மார்பில் - (அவனுடைய) பகைவர்களின் மார்பில்; உதையானேல் - படைக்கலங்களைச் செலுத் தவில்லையென்றால்; உதையுண்டு - (அப் பகைவரின் படைக்கருவி களால் தான்) அடிபட்டு; ஆவி உலவானேல் - உயிரைப் போர்க்கவில் லையென்றால்; உலகில் மற்றும் - உலகத்தில் வேறு கைம்மாறு; உண் டாகவற்றோ - என்ன உள்ளது? (இல்லை). உதவி செய்தவனுக்காக ஒருவன் போர்க்களம் சென்று அவன் பகைவரை அழிக்கவேண்டும். அவ்வாறு பொருது அழிக்க முடியாவிட்டால் அப் பகைவரின் கையால் தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும்; இவை ஒருவாறு ஈடாகலாம். இவையல்லாமல் உலகில் வேறு கைம்மாறு என்பது வேறு என்ன உள்ளது? ஒப்புமை: 'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது' (குறள்:101) உதைத்தல்: அம்பைச் செலுத்துதல். 66 |