அங்கதன் இலக்குவனை வணங்கிச் சுக்கிரீவனிடம் செல்லுதல் 4346. | வல்ல மந்திரியரோடும், வாலி காதலனும், மைந்தன் அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்; வில்லியும் அவனை நோக்கி, 'விரைவின் என் வரவு, வீர! சொல்லுதி நுந்தைக்கு' என்றான்;' 'நன்று' என, தொழுது போனான். |
வாலி காதலனும் - வாலியின் மகனான அங்கதனும்; வல்ல மந் திரியரோடும் - நீதிமுறைகளிலும் அரசியல் நூல்களிலும் தேர்ச்சி பெற்ற அமைச்சர்களுடன் (வந்து); மைந்தன் அல்லி அம் கமலம் அன்ன - வீரனான இலக்குவனுடைய அகவிதழ் கொண்ட அழகிய செந்தாமரை மலர்போன்ற; அடி பணிந்து - திருவடிகளில் வீழ்ந்து வணங்கி; அச்சம் தீர்ந்தான் - (இலக்குவனால் என்ன நேரிடுமோ என்று எண்ணிய) பயம் நீங்கப் பெற்றான்; வில்லியும் அவனை நோக்கி - வில்வீரனான இலக்குவனும் அந்த அங்கதனைப் பார்த்து; வீர என் வரவு - 'வீரனே! எனது வருகையை; நுந்தைக்கு விரைவின் சொல்லுதி - உன் சிற்றப்பனாகிய சுக்கிரீவனுக்கு விரைந்து சென்று கூறுவாய்; என்றான் - என்று மொழிந்தான் (அது கேட்டு); நன்ற என - நல்லது என்று சொல்லி; தொழுது போனான் -- (அவ் இலக்குவனை) வணங்கிப் போனான். 78 |