அங்கதன் மறுமொழி

4356.உணர்த்தினேன்முன்னர்; நீ அஃது
      உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி,
      மாருதிக்கு உரைக்கப் போனேன்;
இணர்த் தொகை ஈன்ற பொன் - தார்
      எறுழ் வலித் தடந் தோள் எந்தாய்!
கணத்திடை, அவனை, நீயும்
      காணுதல் கருமம்' என்றான்.

     இணர்த் தொகை ஈன்ற - பூங்கொத்தின் தொகுதி கொண்டு
தொடுக்கப்பட்ட; பொன்தார் - அழகிய மாலையை அணிந்த; எறுழ் வலித்
தடந்தோள் எந்தாய் -
மிக்க வலிமை பொருந்திய பெரிய தோள்
களையுடைய என் தந்தையே!முன்னர் உணர்த்தினேன் - (இலக்குவன்
வருகையை உனக்கு) முன்னமே தெரிவித்தேன்; (ஆனால் அப்பொழுது); நீ
உணர்வின் தீர்ந்தாய் -
நீ உணர்வு மயங்கியிருந்தாய்; அஃது உணர்ந்திலை
-
(அதனால் நான் சொன்ன) அதனைத் தெரிந்து கொண்டாயில்லை;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி -
(ஆகவே) நான் செய்யக் கூடியது
வேறு ஒன்றும் இல்லாததை உணர்ந்து; மாருதிக்கு உரைக்கப் போனேன் -
அனுமனுக்குச் சொல்லப் போனேன்; கணத்திடை - ஒரு நெடிப்
பொழுதிற்குள்; அவனை - அந்த இலக்குவனை; நீயும் காணுதல் - நீயும்
சென்று பார்ப்பது; கருமம் என்றான் -  செய்ய வேண்டிய செயலாகும் என்று
(சுக்கிரீவனிடம் அங்கதன்)கூறினான்.

     எறுழ்வலி - ஒரு பொருட் பன்மொழி.                          88