4363. | 'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும், தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்: கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால்; அருந்தினாரை நஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்காது அன்றே? |
கள்ளினால் - கள்ளைக் குடிப்பதால்; வஞ்சமும் களவும் - வஞ் சனையும் திருட்டும்; பொய்யும் மயக்கமும் - பொய் பேசுதலும் அறி யாமையும்; மரபு இல் கொட்பும் - தொன்றுதொட்டு வந்த முறைக்கு மாறான கொள்கையும்; தஞ்சம் என்றாரை - அடைக்கலமாக அடைந்தவரை; நீக்கும் தன்மையும் - பாதுகாவாது நீக்கும் தீய பண்பும்; களிப்பும் - செருக்கும்; தாக்கும் - (சேர்ந்து வந்து) வருத்தும்; கஞ்ச மெல் அணங்கும் - செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மென்மை நிரம்பிய திருமகளும்; தீரும் - நீங்குவாள்; நஞ்சமும் - நஞ்சும்; அருந்தினாரைக் கொல்வது அல்லால் - உண்பவரைக் கொல்லுமேயல்லாமல்; நரகினை நல்காது - (அவர்களுக்கு) நரகத்தைக் கொடுக்காது. தன்னை உண்டவரது உடம்பை மட்டும் நஞ்சு அழிக்கும்; கள்ளோ உடம்பையழித்தலோடு உயிரையும் நரகத்தில் சேர்க்கும் என்பது. உவமானமாகிய நஞ்சைவிட உவமேயமாகிய மதுவுக்கு வேற்றுமை தோன்றக் கூறியது: வேற்றுமையணி. கள்ளினால் - வேற்றுமை மயக்கம். 'துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்' - (குறள்- 926) என்ற குறட் கருத்தை ஒப்பிட்டுணர்க. குடிவெறியால் கைப்பொருள் அனைத்தும் இழந்து வறியராவர் ஆதலின் கஞ்ச மெல்லணங்கும் தீரும் என்றார். திருக்குறளும் இக்கருத்தினைக் கூறும்: 'இருமனப் பெண்டிரும் கள்ளுங் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு' (குறள் : 920) 95 |