இலக்குவனைச் சுக்கிரீவன் எதிர்கொள்ளல்

4366.என்று கொண்டு இயம்பி, அண்ணற்கு
      எதிர்கொளற்கு இயைந்த எல்லாம்
நன்று கொண்டு, 'இன்னும் நீயே
      நணுகு!' என, அவனை ஏவி,
தன் துணைத் தேவிமாரும்,
      தமரொடும தழுவ, தானும்
நின்றனன், நெடிய வாயில்
      கடைத்தலை, நிறைந்த சீரான்.

     நிறைந்த சீரான் - மிகுந்த நற்பண்புகளைக் கொண்ட சுக்கிரீவன்;
என்று கொண்டு இயம்பி -
மதுவை இனித் தொடேன் என்று சூளுரை செய்து
கொண்டு; அண்ணற்கு எதிர்கொளற்கு - இலக்குவனை எதிர் கொள்வதற்கு;
இயைந்த எல்லாம் -
உரிய எல்லாவற்றையும்; நன்று கொண்டு - சிறப்பாக
எடுத்துக் கொண்டு; இன்னும் நீயே நணுகு - இப்போதும் நீயே (அவனிடம்)
செல்வாய்; எனஅவனை ஏவி - என்று அங்கதனுக்குக் கட்டளையிட்டு; தன்
துணைத் தேவிமாரும் -
தன் வாழ்க்கைத் துணைவியரான மனைவியர்;
தமரொடும் தழுவ -
உறவினருடன் தன்னைச் சூழ்ந்திருக்க; தானும் - தானும்;
நெடிய வாயில் கடைத்தலை -
உயர்ந்த பெரிய அரண்மனையின்
தலைவாயிலில்; நின்றனன் - காத்திருந்தான்.

     அண்ணலை எதிர்கொள்ள இயைந்தவை: கொடி, குடை, சாமரம்
முதலியன.  அண்ணற்கு வேற்றுமை மயக்கம் அரசனுக்குப் பட்டத்தரசியர்
தவிர வேறு மனைவியரும் உண்டாகலின் 'துணைத் தேவிமார்' எனப்பட்டது.
                                                           98