அனுமன் எங்கே என இராமன் வினாவ அவன் சேனையுடன் வருவன்என்றல் 4402. | ஆரியன், பின்னரும் அமைந்து, 'நன்கு உணர் மாருதி எவ் வழி மருவினான்?' என, சூரியன் கான்முளை, 'தோன்றுமால், அவன் நா அரும் பரவையின் நெடிய சேனையான்.' |
ஆரியன் - இராமன்; பின்னரும் அமைந்து - மறுபடியும் சொல்லத் தொடங்கி (சுக்கிரீவனை நோக்கி); நன்கு உணர் மாருதி - (முக் காலத்தையும்) நன்றாக அறியவல்ல காற்றுக் கடவுளின் மகனான அனுமன்; எவ்வழி மருவினான் என - எங்கே இருக்கிறான் என்று கேட்க; (அதற்கு); சூரியன் கான்முளை - சூரியன் மகனான சுக்கிரீவன்; அவன் - அந்த அனுமன்; நீர் அரும் பரவையின் - நீர் நிரம்பிய அரிய கடல் போன்ற; நெடிய சேனையான் - பெருஞ் சேனையையுடையவனாய்; தோன்றும் - வந்து சேருவான். இராமன் அனுமனைக் குறித்தத் தனியே வினவியதால் அவனிடம் இராமன் வைத்துள்ள பேரருள் தோன்றும். பரவை பரந்திருத்தலின் கடலுக்குக் காரணக் குறியாயிற்று. 134 |