4404.'ஒன்பதினாயிர கோடி உற்றது
நின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு
நன்கு உறும் அவதி நாள் நாளை; நண்ணிய
பின், செயத்தக்கது பேசற்பாற்று' என்றான்.

     ஒன்பதின் ஆயிரம் கோடி - (இப்பொழுது என்னுடனே)
ஒன்பதினாயிரங் கோடிக் கணக்கான; நின்பெருஞ் சேனை - உனது பெரிய
வானர சேனை; உற்றது - வந்துள்ளது; அந் நெடிய சேனைக்கும் - (இனி
வரவேண்டிய) அந்தப் பெரிய சேனைக்கு; நன்கு உறும்
அவதி நாள் நாளை -
ஒன்று திரண்டு வந்து சேர்வதற்குரிர நாளும்
நாளைக்கே; நண்ணிய பின் - அந்தச் சேனையும் வந்த பிறகு; செயத்
தக்கது-
செய்யவேண்டியதைப் பற்றி; பேசற் பாற்று - பேசுவது தகுதி
யுடையது; என்றான் - என்று கூறிமுடித்தான்.

     வானர சேனையுடன் அனுமன் வந்த பிறகே செய்யத்தக்கதைப் பற்றிப்
பேசவேண்டு மென்று சுக்கிரீவன் கருதினான் என்பது.  தான் இராமனுக்கு
அடியவன் என்ற எண்ணத்தால் சுக்கிரீவன் தன் சேனையை 'நின் பெருஞ்
சேனை' என்றான்.

     நெடியசேனை - துணைப்படை.                             136