கலித்துறை

4408.ஆனை ஆயிரம் ஆயிரத்து
      எறுழ் வலி அமைந்த
வானராதிபர் ஆயிரர் உடன்
      வர, வகுத்த
கூனல் மாக் குரங்கு
      ஐ - இரண்டு ஆயிர கோடித்
தானையோடும், - அச் சதவலி
      என்பவன் - சார்ந்தான்.

     அச்சதவலி என்பவன் - அந்தச் சதவலி என்னும் வானர வீரன்;
ஆயிரம் ஆயிரத்து ஆனை -
பத்து இலட்சம் யானைகளின்; எறுழ்வலி
அமைந்த -
மிக்க வன்மையோடு பொருந்திய; வானர அதிபர் ஆயிரர் -
வானர சேனைத் தலைவர் ஆயிரம் பேர்; உடன்வர - தன்னைப்
பின்தொடர்ந்து வர; வகுத்த - அணிவகுக்கப்பட்ட; கூனல் மா - முதுகு
கூனியுள்ள பெரிய; ஐ இரண்டு ஆயிர கோடி - பதினாயிரம் கோடி;
குரங்குத் தானையோடு -
வானர சேனையோடு; சார்ந்தான் - சுக்கிரீவனிடம்
வந்தான்.

     எறுழ் வலி: ஒரு பொருட் பன்மொழி. சதவலி: முகத்தில் நூறு மடிப்பு
களையுடையவன்.  வான்மீகத்தில் இப்பெயர் 'சதபலி' என்று காணப்படுகிறது.
                                                           2