4422.கறங்கு போல்வன, காற்றினும்
      கூற்றினும் கடிய,
பிறங்கு தெண் திரைக்
      கடல் புடைபெயர்ந்தெனப் பெயர்வ,
மறம் கொள் வானரம் ஒன்பது
      கோடி எண் வகுத்த,
திறம் கொள், வெஞ் சினப்
      படைகொடு, - குமுதனும் - சேர்ந்தான்.

     குமுதனும் - குமுதன் என்னும் வீரனும்; கறங்கு போல்வன - காறற்ாடி
போல விரைந்து செல்வனவும்; காற்றினும் கூற்றினும் கடிய - காற்றைக்
காட்டிலும் வேகம் உடையனவும், யமனைவிடக் கொடு மையுடையனவும்;
பிறங்கு தெண்திரை -
விளங்குகின்ற தெளிவான அலைகளையுடைய; கடல்
புடை பெயர்ந்து எனப் பெயர்வ -
கடல் இடம் விட்டு எழுந்தது போன்று
செல்வனவும்; மறம் கொள் வானரம் - வீரம் கொண்ட வானரங்கள்; ஒன்பது
கோடி எண் வகுத்த -
ஒன்பது கோடியென்று கணக்கிடப்பட்டனவும்; திறம்
கோள் வெம்சினப் படை கொடு -
மனவலியும் உடல் வன்மையும்
கடுமையான கோபமும் கொண்டனவுமான படைகளை உடன் கொண்டு;
சேர்ந்தான் -
வந்து சேர்ந்தான்.

     கறங்கு - காற்றாடி; வானத்தில் சுழன்று செல்வதெனக் காரணக்
குறியாயிற்று.  கடிய - இரட்டுறமொழிதல்: காற்றினும் கூடிய கூற்றினும் கடிய
என வேகத்தையும் கொடுமையையும் குறித்தவாறு.                  16