4431. | ஒடிக்குமேல், வட மேருவை வேரொடும் ஒடிக்கும்; இடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்; பிடிக்குமேல், பெருங் காற்றையும் கூற்றையும் பிடிக்கும்; குடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும். |
ஒடிக்குமேல் - (அவ்வானர சேனை) ஒடிக்க வேண்டும் என்று கருதினால்; வட மேருவை வேரொடும் ஒடிக்கும் - வடக்கிலுள்ள மேரு மலையையும் அடியோடு ஒடித்துவிடும்; இடிக்குமேல் - இடிக்க வேண்டுமென்று கருதினால்; நெடு வானக முகட்டையும் இடிக்கும் - பெரிய ஆகாயத்தின் மேல் முகட்டையும் இடித்து விடும்; பிடிக்குமேல் - பிடிக்க வேண்டும் என்று விரும்பினால்; பெருங் காற்றையும் - பெரிய காற் றையும்; கூற்றையும் பிடிக்கும் - யமனையும் பிடித்து விடும்; குடிக்கு மேல் - குடிக்க வேண்டும் என்று நினைத்தால்; கடல் ஏழையும் - ஏழு கடல்களையும்; குடங்கையின் குடிக்கும் - உள்ளங்கையால் அள்ளிக் குடித்து விடும். பிறர் எவராலும் செய்யமுடியாத அரிய பெரிய செயல்களையெல்லாம் எளிதில் செய்து முடிக்கும் இவ் வானரப்படை என்பது. 25 |