படைத் தலைவர்கள் சுக்கிரீவனை வணங்குதல் 4433. | ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்பச் சூழும் வானரப் படையொடு, அவ் வீரரும் துவன்றி, 'ஆழி மா பரித் தேரவன் காதலன் அடிகள் வாழி! வாழி!' என்று உரைத்து, அலர் தூவினா, வணங்கி. * |
அவ்வீரரும் - அந்த வானரப் படைத் தலைவர்களும்; ஏழு மா கடல் பரப்பினும் - ஏழு பெரிய கடல்களின் பரப்பளவைக் காட்டிலும்; பரப்பு என இசைப்ப - விரிந்துள்ளது என்று கூறுமாறு; சூழும் வானரப் படையொடு - சூழ்ந்துள்ள வானர சேனையுடனே; துவன்றி - நெருங்கிவந்து; ஆழி மா பரித்தேரவன் காதலன் - ஒற்றைச் சக்கரத்தையும் சிறந்த குதிரைகளையுமுடைய தேரைச் செலுத்துபவனான சூரியன் மகனாகிய சுக்கிரீவனுடைய; அடிகள் வாழி வாழி என்று உரைத்து - திருவடிகள் வாழ்க வாழ்கவென வாழ்த்தி; வணங்கி - வழிபட்டு; அலர் தூவினர் - மலர்களைத் தூவினார்கள். சூரியனது தேர், காலத்தின் வடிவமான ஒற்றைச் சக்கரத்தையும் ஏழு குதிரைகளையும் உடையது என்பது நூற் கொள்கை. வாழி வாழி - அடுக்கு அன்பின் மிகுதி பற்றியது. 27 |