4436. | அஞ்சோடு ஐ - இரண்டு யோசனை அகலத்தது ஆகி, செஞ்செவே வட திசைநின்று தென் திசை செல்ல, எஞ்சல் இல் பெருஞ் சேனையை, 'எழுக' என ஏவி, வெஞ் சினப் படை வீரரை உடன் கொண்டு மீண்டான் * |
அஞ்சொடு ஐ இரண்டு யோசனை - பதினைந்து யோசனைப் பரப்பளவு; அகலத்தது ஆகி - அகலம் உடையதாய்; செஞ்சேவே - நேராக; வடதிசை நின்று - வடக்கிலிருந்து; தென்திசை செல்ல - தெற்கு நோக்கிச் செல்வதற்கு; எழுக என - புறப்படுக என்று; எஞ்சல் இல் பெருஞ்சேனையை - குறைவற்ற பெரிய வானரப் படையை; ஏவி - ஏகுமாறு கட்டளையிட்டு; வெஞ்சினப் படை வீரரை உடன் கொண்டு - கொடிய சினம் உள்ள வானரப்படைத் தலைவரைத் தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டு; மீண்டான் - சுக்கிரீவன் இராமனிடம் திரும்பவும் வந்து சேர்ந்தான். படை நடைபோட்டுச் செல்லும்போது இராமபிரான் ஒரே இடத்திலிருந்து பார்ப்பதற்குச் சுக்கிரீவன் ஏற்பாடு செய்ததை இப்பாடல் புலப்படுத்துகின்றது. எழுக + என = எழுகென: (அகரம்) தொகுத்தல்விகாரம். 30 |