4436. அஞ்சோடு ஐ - இரண்டு யோசனை
      அகலத்தது ஆகி,
செஞ்செவே வட திசைநின்று
      தென் திசை செல்ல,
எஞ்சல் இல் பெருஞ் சேனையை,
      'எழுக' என ஏவி,
வெஞ் சினப் படை வீரரை
      உடன் கொண்டு மீண்டான்         *

     அஞ்சொடு ஐ இரண்டு யோசனை - பதினைந்து யோசனைப்
பரப்பளவு; அகலத்தது ஆகி - அகலம் உடையதாய்; செஞ்சேவே - நேராக;
வடதிசை நின்று -
வடக்கிலிருந்து; தென்திசை செல்ல - தெற்கு நோக்கிச்
செல்வதற்கு; எழுக என - புறப்படுக என்று; எஞ்சல் இல்
பெருஞ்சேனையை -
குறைவற்ற பெரிய வானரப் படையை; ஏவி - ஏகுமாறு
கட்டளையிட்டு; வெஞ்சினப் படை வீரரை உடன் கொண்டு - கொடிய
சினம் உள்ள வானரப்படைத் தலைவரைத் தன்னுடன் வருமாறு அழைத்துக்
கொண்டு; மீண்டான் - சுக்கிரீவன் இராமனிடம் திரும்பவும் வந்து சேர்ந்தான்.

     படை நடைபோட்டுச் செல்லும்போது இராமபிரான் ஒரே இடத்திலிருந்து
பார்ப்பதற்குச் சுக்கிரீவன் ஏற்பாடு செய்ததை இப்பாடல் புலப்படுத்துகின்றது.
எழுக + என = எழுகென: (அகரம்) தொகுத்தல்விகாரம்.               30