4442.'ஈசன் மேனியை, ஈர் - ஐந்து
      திசைகளை, ஈண்டுஇவ்
ஆசு இல் சேனையை,
      ஐம்பெரும் பூதத்தை, அறிவை,
பேசும் பேச்சினை, சமயங்கள்
      பிணக்குறும் பிணக்கை, -
வாச மாலையாய்! - யாவரே முடிவு
      எண்ண வல்லார்?

     வாச மாலையாய் - மணம் நிறைந்த மாலையை அணிந்தவனே!ஈசன்
மேனியை -
இறைவனின் திருமேனியையும்; ஈர் ஐந்து திசைகளை - பத்துத்
திக்குகளையும்; ஐம்பெரும் பூதத்தை - ஐந்த பெரிய பூதங்களையும்; அறிவை
-
நுட்பமான அறிவையும்; பேசும் பேச்சினை - பேசும் மொழிகளையும்;
சமயங்கள் பிணக்குறும் பிணக்கை -
தமக்குள் சமயங்கள் மாறுபடுகின்ற
மாறுபாட்டையும்; ஈண்டு இவ் ஆசு இல் சேனையை - இங்கே திரண்டுள்ள
குற்றமற்ற இவ்வானரப் படையையும்; யாவரே முடிவு எண்ண வல்லார் -
எவர்தாம் அவற்றின் முடிவைக் கணக்கிட வல்லவர்?

     உபமேயமாகிய சேனையையும் உவமானமாகிய ஈசன்மேனி
முதலியவற்றையும் ஒருங்கே ஒரு பொதுத் தன்மையைக் கொண்டு முடியுமாறு
கூறப்பட்டுள்ளது.  இறைவன் எங்குமுள்ளவனாதலால் அவனது திருமேனி
அளவிட்டு அறிய முடியாதது; ஐம்பெரும் பூதங்கள் உலக முழுவதும்
நிம்பியிருத்தலால் அவற்றிற்கும் ஓர் அளவு இல்லை; புதிது புதிதாகப்
பொருள்களை அறியும் அறிவுக்கும் ஓர் எல்லையில்லை; ஒருவர் ஒன்று
பேசும்போது அதனைத் தொடர்ந்து பேசு இடம் உண்டாதலால் அதற்கும் ஓர்
அளவில்லை.  தன் தெய்வம் என் தெய்வம் என்று பேசிச் சழக்கிடும் சமய
வாதங்களுக்கும் முடிவில்லை.  இவற்றைப் போலவே வானரப் படையின்
அளக்கமுடியாத நிலை இங்கே காட்டப்பெற்றுள்ளது.                  36