4446. | 'ஈண்டு, தாழ்க்கின்றது என், இனி - எண் திசை மருங்கும், தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்? நீண்ட நூல்வலாய்!' என்றனன், இளையவன்; நெடியோன், பூண்ட தேரவன் காதலற்கு, ஒரு மொழி புகலும்: |
நீண்ட நூல் வலாய் - பெருமை வாய்ந்த நூல்களில் வல்லவனே; எண்திசை மருங்கும் - எட்டுத் திசைகளினிடங்களிளெல்லாம்; தேண்டு வார்களை - (சீதையைத்) தேடுவதற்கு உரியவர்களை; வல்லையில் செலுத்துவது அல்லால் - விரைவாக அனுப்புவதல்லாமல்; இனி ஈண்டுத் தாழ்க்கின்றது என் - இனிமேலும் இங்கிருந்து காலதாமதம் செய்வது எதற்காக? என்றனன் இளையவன் - என்று இலக்குவன் கூறினான். நெடியோன் - பெருமை மிக்கவனான இராமன்; பூண்ட தேரவன் காதலற்கு- ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற தேரையுடையவனான சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கு; ஒரு மொழிபுகலும் - ஒரு வார்த்தைசொல்லலானான். 40 |