4454.'வள்ளல் தேவியை
      வஞ்சித்து வௌவிய
கள்ள வாள் அரக்கன்
      செலக் கண்டது,
தெள்ளியோய்! ''அது தென்
      திசை என்பது ஓர்
உள்ளமும் எனக்கு உண்டு''
      என உன்னுவாய்.

     தெள்ளியோய் - தெளிவான அறிவுள்ளவனே! வள்ளல் தேவியை -
சிறந்த கொடியாளனான இராமனின் மனைவியாகிய சீதையை; வஞ்சித்து
வௌவிய -
வஞ்சனையால் கவர்ந்து சென்ற; கள்ள வாள் அரக்கன் -
கள்ளத் தன்மையுடைய கொடிய அரக்கனான இராவணன்; செலக் கண்டது
அது -
போகக் கண்டதான அந்தத் திசை; தென்திசை என்பது - தெற்குத்
திக்காகும் என்பதாகிய; ஓர் உள்ளமும் - ஒரு நினைவும்; எனக்கு உண்டு -
என்னிடம் தோன்றுகிறது; என உன்னுவாய் - என்று நீ கருதுவாய்.

     கண்டது - சீதை தன் கலன்களை ஒரு முடிப்பில் பொதிந்து எறிந்ததைக்
கண்டது.                                                       8