ஏனைத் திசைகளுக்கு மற்றவர்களை அனுப்புதல்

4456.'குட திசைக்கண், சுடேணன்;
     குபேரன் வாழ்
வட திசைக்கண்,
      சதவலி; வாசவன்
மிடல் திசைக்கண்,
      வினதன்; விறல் தரு
படையொடு உற்றுப் படர்க'
      எனப் பன்னினான்.

     குடதிசைக் கண் - மேற்குத் திசையில்; சுடேணன் - இடபனும்;
குபேரன் வாழ் வடதிசைக்கண் -
(திக்குப் பாலகனான) குபேரன் வாழுகின்ற
வடக்குத் திசையில்; சதவலி - சதவலி என்னும் தலைவ னும்; மிடல் வாசவன்
திசைக்கண் -
வலிமைக்கொண்ட இந்திரனுக்குரிய கிழக்குத் திக்கில்; வினதன்
-
வினதனும்; விறல்தரு படையொடு - வலிமை மிக்க சேனையோடு; உற்றுப்
படர்க -
சேர்ந்து செல்வாராக; எனப் பன்னினான் - என்று கூறினான்.

     குபேரன்: விச்சிரவசு என்னும் முனிவனுக்கு மூத்த மனைவியான பரத்து
வாச மகளிடம் பிறந்த மகனாவான்.

     வாசவன்: வசுக்களுக்குத் தலைவன். படர்கென - (அகரம்) தொகுத்தல்
விகாரம். (படர்க + என)                                        10