4466. | ஆண்டு இறந்தபின், அந்தரத்து இந்துவைத் தீண்டுகின்றது, செங் கதிர்ச் செல்வனும் ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது - பாண்டுவின் மலை என்னும் பருப்பதம். |
ஆண்டு இறந்தபின் - அந்தப் பொழிலைக் கடந்த பின்பு; அந்தரத்து இந்துவைத் தீண்டுகின்றது - ஆகாயத்தில் மதியைத் தொடுவதும்; செங் கதிர்ச் செல்வனும் - சிவந்த கிரணங்களைச் செல்வமாக வுடைய சூரியனும்; ஈண்டு உறைந்து அலது - இம் மலையில் தங்காமல்; ஏகலம் என்பது - அப்பால் செல்லமாட்டோம் என்று நினைத்தற்கு இடமானதுமாகிய; பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் - பாண்டு மலை என்னும் மலை(யுள்ளது) (அதைச் சென்றடையுங்கள்.) பாண்டுமலை மிகவுயர்ந்து மிக இனிமையான இடடாயிருத்தலால் கதிரவனும் அங்கே தங்கி அப்பாற் செல்லக் கருதுகின்றான் என்பது. பருப்பதம் - பர்வதம் என்ற வடசொல் திரிபு. 20 |