4501.'கேள் ஒக்கும் அன்றி, ஒன்று
      கிளத்தினால் கீழ்மைத்து ஆமே;
கோள் ஒக்கும்என்னின் அல்லால்,
      குறி ஒக்கக் கூறாலாமே?
வாள் ஒக்கும் வடிக் கணாள்தன்
      புருவத்துக்கு உவமை வைக்கின்,
தாள் ஒக்க வளைந்து நிற்ப
      இரண்டு இல்லை, அனங்க சாபம்.

     வாள் ஒக்கும் - வாள் போன்ற; வடிக் கணாள்தன் புருவத்துக்கு -
கூர்மையான விழிகளையுடைய சீதையின் புருவங்களுக்கு; உவமை வைக்கின்
-
உவமையெடுத்துப் பொருந்திப் பார்த்தால்; கேள் ஒக்கும் அன்றி - உறவாக
அமைந்த அவை தாங்களே ஒன்றுக் கொன்ற உவ மையாகுமே அல்லாமல்;
ஒன்று -
வேறொரு பொருளை; கிளத்தினால் - உவமையாகக் கூறினால்;
கீழ்மைத்து ஆம் -
இழிந்த உவமையேயாகும் (மற்றும்); கோள் ஒக்கும்
என்னின் அல்லால் -
(பொதுவாகப் பெண்களின் புருவத்திற்கு உவமையாகும்
பொருளையெடுத்துத் தன்) மனப் போக்கிற்குப் பொருந்தியுள்ளது என்று
(சீதையின் புருவங்களுக்கு) உவமானமாகக் கூறினால் கூறலாமேயல்லாமல்; குறி
ஒக்கக் கூறலாமே -
உவமைக் கருத்துப் பொருந்தக் கூற முடியுமோ?
(முடியாது); தாள் ஒக்க வளைந்து நிற்ப - (மன்மதன் வில்லை உவமை
கூறலாமென்றால்) இரண்டு முனையும் பொருந்துமாறு வளைந்து நிற்பனவாகிய;
இரண்டு அளங்க சாபம் -
மன்மதனுடைய இரண்டு விற்கள்; இல்லை -
உலகத்தில் இல்லை (ஆதலால், அதுவும் உவமை கூறப் பொருந்தாது).

     சீதையின் புருவங்கள் தம்மில் ஒன்றையொன்று ஒக்குமேயல்லாமல் வேறு
ஓர் உவமைப் பொருளைப் பெறமாட்டா; ஒரு கால் ஏதாவது உவமானப்
பொருளை என மனப்போக்கின்படி கூறுகின்றேன் என்று கூறலாமேயல்லாமல்
அந்த உவமை அப் புருவங்களுக்குப் பொருந்திய உவமையாகாது; இழிந்த
உவமையேயாகும்; இனி, மன்மதனின் வில்லை உவமையாகக் கூறலாமென்றால்,
முனை வளைந்தனவாகிய இரண்டு விற்கள் மன்மதனிடம் இல்லையாகையால்
அம் மன்மதன் வில் உவமை என்பது ஏற்புடைத்தாகாது என்பது.

     இழிவுவமை: உயர்ந்த பொருளோடு இறப்ப இழிந்ததை உவமையாகக்
கூறுவது.                                                      55