4515.'சூழி மால் யானையின் துணை
      மருப்பு இணை எனக்
கேழ் இலா வன முலைக்
      கிரி சுமந்து இடைவது ஓர்
வாழி வான் மின் இளங்
      கொடியின் வந்தாளை, அன்று,
ஆழியான் அரசவைக்
      கண்டதும் அறைகுவாய்.

     சூழி மால் யானையி்ன் - முகபடா மணிந்த மதம் பிடித்த ஆண்
யானையினது; துணை மருப்பு இணையென - ஒன்றோடு ஒன்று ஒத்து
விளங்கும் இரண்டு தந்தங்கள் என்று கூறும்படி; கேழ் இலா - (அவற்றிற்கு)
ஒப்பாகாத; வனம் முலைக்கிரி - அழகிய முலைகளாகிய மலைகளை; சுமந்து
-
தாங்கி; இடைவது - (பாரத்தைப் பொறுக்க முடியாமல்) ஒடிவதாகிய; ஓர்
வானமின் இளங்கொடியின் -
ஒப்பற்ற வானத்திலுள்ள மின்னலின்
இளங்கொடி போல; வந்தாளை - வந்த வளாகிய சீதையை; அன்று - அக்
காலத்தில்; ஆழியான் அரசவைக் கண்டதும் - ஆணைச் சக்கரமுடைய
சனக மன்னனது சபையில் பார்த்ததையும்; அறைகுவாய் - சொல்வாய்.

     முலைக் கிரியைச் சுமக்கும் மின்னிளங் கொடி சீதைக்கு,
இல்பொருளுவமை.  சூழி: யானையின் முகத்திடும் அணி. வாழி - அசை. 69