துன்புற்ற வானரர் பிலத்தில் புகுதல்

4545. ஒதுங்கல் ஆம் நிழல்
      இறை காண்கிலாது, உயிர்
பிதுங்கல் ஆம் உடலினர்,
      முடிவு இல் பீழையார்,
பதங்கள் தீப் பருகிடப்
      பதைக்கின்றார், பல
விதங்களால், நெடும் பில
      வழியில் மேவினார்.

     (வானர வீரர்)ஒதுங்கலாம் நிழல் இறை காண்கிலாது - (வெயிலுக்கு)
ஒதுங்கக் கூடிய சிறிதளவு நிழலைக்கூடக் காணமாட்டாது; உயிர் பிதுங்கல்
ஆம் உடலினர் -
உயிர் வெளியேறக் கூடிய உடலையுடையவர்களும்; முடிவு
இல் பீழையார் -
எல்லையற்றதுன்பத்தையடைந்தவர்களும்; பதங்கள்
நீர்ப்பருகிடப் பதைக்கின்றார் -
அடிகளில் (அப் பாலைவனத்தின்) சூடு
தாக்குவதால் துடிதுடிக்கின்றவர்களுமாய்; பல விதங்களால் - (அந்த
வெப்பத்திலிருந்து தப்புவதற்குப்) பல வகையிலும் முயற்சி செய்து முடிவாக;
நெடும் பில வழியில் -
(அங்கே இருந்த) பெரிய பிலத் துவாரத்தின் வழியை;
மேவினார் -
அடைந்தார்கள்.

     வானரவீரர்கள் அந்தப் பாலைவனத்தில் ஒதுங்கித் தப்புவதற்குச் சிறு
நிழல் கூட அகப்படாமல் உயிர் நீங்கும் நிலையையடைந்து, முடிவாக அங்கே
காணப்பட்ட ஒரு பிலத்தின் வழியைச் சேர்ந்தனர் என்பது. பீழை: துன்பம்
பிதுங்கல்: வெளிப்படல்.                                        25