4550.'உய்வுறுத்துவென்; மனம் உலையிர்;
      ஊழின் வால்
மெய்யுறப் பற்றுதிர்;
      விடுகிலீர்' என,
ஐயன், அக் கணத்தினில்,
      அகலும் நீள் நெறி
கையினில் தடவி, வெங்
      காலின் ஏகினான்.

     உய்வுறுத்துவென் - (மாருதி மற்றவர்களைப் பார்த்து) நீங்கள் பிழைக்க
(வேண்டியன) செய்வேன்; மனம் உலையிர் - உள்ளம் வருந்த வேண்டா;
ஊழின் -
முறையாக (ஒருவர்பின் ஒருவராக நின்று); வால் மெய்யுறப்
பற்றுதிர் -
(எனது) வாலை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; விடுகிலீர்
என -
அதனை விட்டு விடாதீர்கள் என்று கட்டளையிட்டு; அக்கணத்தினில்
-
(அவ் வானரர்கள் தனது  வாலைப் பற்றிக் கொண்ட) அப்பொழுதே; ஐயன்
-
சிறந்தவனான அந்த அனுமன்; அகலும் நீள்நெறி - செல்லவேண்டிய
அந்தக் குகையின் வழியில்; கையினில் தடவி - கையால் தடவிக் கொண்டு;
வெங்காலின் ஏகினான் -
வேகத்தையுடைய காலினால் நடந்து முன்னே
சென்றான்.

     இருட்பிழம்பில் திசை தெரியாமல் திகைத்துத் தம்மைக் காக்குமாறு
வேண்டிய வானரர்களுக்கு அனுமன் அபயமளித்துத் தனது நீண்ட வாலைப்
பிடித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுக் கைகளால் தடவிக் கொண்டு காலால்
முன்னே நடந்து சென்றான் என்பது.  காலின் : காற்றுப்போல விரைந்து
என்றும் பொருள் கொள்ளலாம்.  இருளாதலால் அனுமன் தடவிச் சென்றான்
என்றார்.                                                   30