4573. | 'வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார்; சீதையை ஒளித்தனர்; மறைத்த புரை தேர்வுற்று ஏதம் இல் அறத் துறை நிறுத்திய இராமன் தூதர்; உலகில் திரிதும்' என்னும் உரை சொன்னார். |
வேதனை அரக்கர் - (உலகத்தார்க்குத்) துன்பமே தரும் அரக்கர்கள்; ஒரு மாயை விளைவித்தார் - ஒரு வஞ்சகச் செயலைச் செய்தனர்; சீதையை ஒளித்தனர் - சீதையை எடுத்துச் சென்று மறைத்துவிட்டார்கள்; ஏதம் இல் - குற்றம் நீங்கிய; அறத்துறை நிறுத்திய - தரும நெறியை நிலைபெறச் செய்த; இராமன் தூதர் - இராமன் தூதுவர்கள் நாங்கள்; மறைத்த புரை தேர்வுற்று - (அந்த அரக்கர்கள் சீதையை) ஒளித்து வைத்துள்ள மறைவிடங்களைத் தேடத்தொடங்கி; உலகில் திரிதும் - உலகில் அலைந்து திரிகின்றோம்; என்னும் - என்கின்ற; உரை சொன்னார் - மறுமொழியைக் கூறினார். புரை: மறைவான உறைவிடம். 53 |