வானரர் பொய்கைக் கரை அடைதல் 4593. | மாருதி வலித் தகைமை பேசி, மறவோரும், பாரிடை நடந்து, பகல் எல்லை படரப் போய் நீருடை பொய்கையினின் நீள் கரை அடைந்தார்; தேருடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான். |
மறவோரும் - வலிமையுள்ள வானர வீரர்களும்; மாருதி வலித்த கைமை பேசி - அனுமனது வலிமையின் தன்மையைப் புகழ்ந்து கூறிக் கொண்டு; பகல் எல்லை படர - அன்றைய பகல்முழுவதும்; பாரிடை நடந்துபோய் - பூமியில் நடந்து சென்று; நீருடைய பொய்கையினின் - நீர் நிரம்பிய ஒரு தடாகத்தின்; நீள் கரை அடைந்தார் - நீண்ட கரையை அடைந்து தங்கினார்கள் (அப்பொழுது); தேருடை நெடுந்த கையும் - (வானத்தில் செல்லும்) தேரையுடைய பெருந்தகையான சூரியனும்; மேலை மலை சென்றான் - மேற்குத் திசையிலுள்ள அத்தமனகிரியை அடைந்தான் (மறைந்தான்). பிலத்தில் இருட்பிழம்பிலகப்பட்டுத் திகைத்த போது தங்களுக்கு வழிகாட்டிக் காத்ததனாலும், பின்பு பிலத்தை இடித்துச் சுயம்பிரபைக்கும் தங்களுக்கும் வெளியே செல்லும் வழியைக் காட்டியதாலும் வானர வீரர் அனுமனின் வலிமையைப் புகழ்ந்தார்கள் என்பது. 73 |