4609. தசநவப் பெயர்ச் சரள சண்பகத்து,
அசந அப் புலத்து அகணி நாடு ஒரீஇ,
உசநவப் பெயர்க் கவி உதித்த பேர்
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார்.

     தசநவப் பெயர் - (அந்த வானர வீரர்கள்) தசநவம் என்ற பெய
ரையுடைய; சரள சண்பகத்து - இனிய சண்பக மரங்களையுடையதும்; அசந
அப்புலத்து அகணி -
உணவையுண்டாக்கும் அழகிய விளை நிலங்களைக்
கொண்ட மருத நிலங்களையுடையதுமாகிய; நாடு ஒரீஇ - வளநாட்டை விட்டு
நீங்கி; உசநவப் பெயர்க் கவி உதித்த - உசுநஸ் என்னும் பெயரையுடைய
சுக்கிரீவன் பிறந்த; பேர் இசை விதர்ப்ப நாடு - பெரும்புகழ் வாய்ந்த
விதர்ப்பம் என்னும் நாட்டை; எளிதின் எய்தினார் - எளிதாகச் சென்று
சேர்ந்தார்கள்.

     தச நவம் (தசார்ணவம்) என்னும் நாடு சண்பகமரத் தொகுதிகளையும்,
நல்ல விளைச்சலைக் கொண்ட புலங்களையுமுடையது என்பது.  சரளம்:
இனிமை.  அகணி: மருதநிலம். ஒருவி என்ற வினையெச்சம் திரிந்து
அளபெடுத்தது.  ஒரீஇ - சொல்லிசையளபெடை. உசநவன்: சுக்கிரீவன்
பெயர்களுள் ஒன்று.                                          16