ஏமகூடத்தில் பிரிந்த யாவரும் மயேந்திரத்தில் ஒன்று கூடுதல் 4649. | 'விரிந்து, நீர், எண் திசை மேவி, நாடினீர், பொருந்துதிர் மயேந்திரத்து' என்று போக்கிய அருந் துணைக் கவிகள் ஆம் அளவு இல்சேனையும் பெருந் திரைக் கடல் எனப் பெரிது கூடிற்றே. * |
நீர் - நீங்கள்; விரிந்து - பரவி; எண்திசை மேவி - எட்டுத் திக்கு களுக்கும் சென்று; நாடினீர் - (சீதையைத்) தேடியவர்களாய்; மயேந் திரத்துப் பொருந்துதிர் - மகேந்திர மலையில் (எங்களோடு) வந்து கூடுங்கள்; என்று - என்று கூறி; போக்கிய - (அங்கதன் முதலோர்) முன்பு அனுப்பிய; அருந்துணை - அரிய துணையாக வந்த; கவிகள் ஆம் அளவு இல் சேனையும் - எண்ணிக்கையற்ற வானர சேனையும்; பெருந்திரைக் கடல் என - பெரிய அலைகளையுடைய மற்றொரு கட லைப் போல; பெரிதும் கூடிற்று - (அங்கதன் முதலான வானர வீரரிடம்) பெருங் கூட்டமாக வந்து சேர்ந்தது. அனுமன் முதலிய வானரத் தலைவருடன் சுக்கிரீவனால் அனுப்பப்பட்டவர் இரண்டு வெள்ளம் கொண்டு பெருஞ்சேனையர் என்பது. 2 |