சீதையைக் காணாமையால் வானரர் வருந்துதல் 4650. | யாவரும் அவ் வயின் எளிதின் எய்தினார்; பூ வரு புரி குழல், பொரு இல் கற்புடைத் தேவியைக் காண்கிலார், செய்வது ஓர்கிலார், நா உறக் குழறிட நவில்கின்றார்அரோ: * |
யாவரும் - வானர வீரர் எல்லோரும்; அவ்வயின் எளிதின் எய் தினார் - அந்த இடத்திற்கு எளிதாக வந்து சேர்ந்தனர்; பூ வரு புரிகுழல் - தாமரை மலரில் தோன்றிய (இலக்குமியின் அவதாரமான) சுருண்ட கூந்தலையும்; பொருவு இல் கற்புடைய - ஒப்பில்லாத கற்புத் தன்மையும் கொண்ட; தேவியைக் காண்கிலார் - சீதையைக் காணாமல்; செய்வது ஓர்கிலார் - இனிமேல் செய்ய வேண்டியது (இன்னதென்று) அறியாதவர்களாய்; நா உறக் குழறிட - நாக்கு மிகவும் குழற; நவில்கின்றார்- பேசலானார்கள். பூவரு: மலரைச் சூடிய என்றும், பூமியிலிருந்து தோன்றிய என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம். காண்கிலார், ஓர்கிலார் - எதிர்மறை முற்றெச்சங்கள். 3 |