4651.'அற்றது நாள் வரை
     அவதி; காட்சியும்
உற்றிலம்; இராகவன்
      உயிரும் பொன்றுமால்;
கொற்றவன் ஆணையும்
      குறித்து நின்றனம்;
இற்றது நம் செயல்,
      இனி' என்று எண்ணினார்.

     வரை நாள் அவதி - (அரசன் நமக்கு) குறித்த தவணையும்; அற்றது -
முடிந்து விட்டது; காட்சியும் உற்றிலம் - சீதையைக் காணுகின்ற காட்சியையும்
நாம் பெறவில்லை; இராகவன் உயிரும் - (இதையறிந்தால்) இராமனது
உயிரும்; பொன்றும் - அழிந்துவிடும்; கொற்றவன் ஆணையும் - அரசனது
கட்டளையும்; குறித்து நின்றனம் - மனத்திற் குறித்து நின்றோம்; இனி நம்
செயல் இற்றது -
இனிமேல் நாம் செய்யக் கூடிய செயலும் இல்லை; என்று
எண்ணினார் -
என்று கூறி (அந்த வானர வீரர்கள்) பலவாறு சிந்தித்தார்கள்.

     கொற்றவன் ஆணை குறித்தது.  முப்பது நாட்கள் கடந்தால் தமக்கு
என்ன தண்டனை கிடைக்குமோ என்ற அச்சத்தால் ஆகும்.

     நம் செயல் இற்றது: தெளிவு பற்றிய காலவழுவமைதி.              4