4665.'ஏகு நீ; அவ் வழி
      எய்தி, இவ் வழித்
தோகையைக் கண்டிலா வகையும்
      சொல்லி, எம்
சாகையும் உணர்த்துதி; தவிர்தி
      சோகம்; - போர்
வாகையாய்!' என்றனன் -
      வரம்பு இல் ஆற்றலான்.

     வரம்பு இல் ஆற்றலான் - எல்லையற்ற ஆற்றல் கொண்ட சாம்பவான்
(அங்கதனை நோக்கி); போர் வகையாய் - போரில் வெற்றி வெறும்
ஆற்றலுடையவனே!ஏகு நீ - நீ (உயிருடன்) போவாயாக; அவ்வழி எய்தி -
(இராமனும் சுக்கிரீவனும் இருக்கின்ற) அந்த இடத்தைச் சேர்ந்து; இவ் வழி -
இந்த இடமெங்கும்; தோகையைக் கண்டிலா வகையும் - மயில் போன்ற
சீதையை நாம் காணமுடியாத திறத்தையும்; சொல்லி - தெரிவித்து; எம்
சாகையும் உணர்த்துதி -
எங்களது மரணச் செய்தியையும் தெரிவிப்பாய்;
சோகம் தவிர்தி -
வருந்துவதை விடு; என்றனன் - என்று கூறினான்.

     செய் அல்லது செத்துமடி என்பது உண்மை வீரருக்கு இலக்கு;
பிராட்டியின் இருப்பிடம் காணவியலாமையால் தாங்கள் உயிர்விடுதலே
வீரமாகும்.  எனவே, 'சோகம் தவிர்தி' என்றான்.  சாகை - சாவு. தோகை:
உவமையாகுபெயர்.                                            18