4671. | 'மிடலுடை எம்பியை வீட்டும் வெஞ் சினப் படையுளர் ஆயினார்' பாரில் யார்?' எனா, உடலினை வழிந்து போய், உவரி நீர் உக, கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்; |
மிடலுடை எம்பியை - வலிமையுடைய என்தம்பியை; வீட்டும் - அழிக்கக் கூடிய; வெஞ்சினப் படையுளர் ஆயினார் - கொடிய கோபத்தோடு தாக்கும் படைக்கலங்களைக் கொண்டவர்; பாரில் யார்? - இந்த உலகத்தில் எவர் உள்ளனர்? எனா - என்று சொல்லி வருந்தி; உடலினை வழிந்துபோய் - உடம்பிலிருந்து கீழே விழுந்துபோய்; உவரி நீர் உக - கடலில் சேருமாறு; கடலினைப் புரை உறும் அருவிக் கண்ணினான் - அந்தப் பெரிய கடலைப் போல நீர்ப்பெருக்குடைய கண் களையுடையவனும். தன் அன்பான தம்பியின் மரணத்தை நினைந்து சம்பாதி கடல்போலக் கண்ணீரைப் பெருக்கினான் என்பது. உடலினை: உருபு மயக்கம். 24 |